Thursday, 10 April 2014

ஒரு ராகம் தராத வீணை____UNNAI VAZHTHI PADIGIREN



ஒரு ராகம் தராத வீணை 
நல்லக் காதல் சொல்லாத பெண்மை
இந்த மண்ணில் ஏனடி பதில் கூறு கண்மணி
அழகான கைகள் மீட்டும் வீணை 

ராகம் வந்தாடும் வீணை 
நல்லக் காதல் கொண்டாடும் பெண்மை 

நதியின் வேகம் பருவ மோகம் 
கடலைச் சேர மாறிப் போகும் 
நாளும் காதல் ராகம் பாடும் பாடும் 
இதழில் போடும் இதழின் காயம் 
இதழில் ஆறும் இனிமை ஆகும் 
தேகம் தீண்டும் நேரம் யோகம் யோகம் 
உன்னை வாழ்த்திப் பாடும் பாடல் உதய ராகமோ
நம்மை வாழ்த்தும் நமது உலகம் நெஞ்சினில்
இன்பமும் கொஞ்சுது கெஞ்சுது

ராகம் வந்தாடும் வீணை 
நல்லக் காதல் கொண்டாடும் பெண்மை
இந்த மண்ணில் தேவையே 
எழில் கொஞ்சும் பூவையே
அழகான கைகள் மீட்டும் வேளை
ராகம் தராத வீணை
நல்லக் காதல் சொல்லாத பெண்மை 

இளமைக் காட்டில் இனிமைக் கூட்டில் 
இருக்கும் தேனை எடுக்கும் போது
காலம் நேரம் தேவை இல்லை இல்லை 
மலையில் ஓரம் மலர்ந்த பூவை 
பறிக்கும் வேடன் இருக்கும் போது
காவல் தாண்டும் பூவை முல்லை முல்லை 
மானும் மீனும் சேர்ந்து மாயம் செய்வதேனடி
வானம் போடும் காமன் நேரம் கூடத் தானய்யா
அட மனதில் சாரல் அடித்தா
கற்பனை அற்புதம் என்னமோ பண்ணுது

ராகம் வந்தாடும் வீணை 
நல்லக் காதல் கொண்டாடும் பெண்மை 
இந்த மண்ணில் தேவையே 
எழில் கொஞ்சும் பூவையே 
அழகான கைகள் மீட்டும் வேளை

ராகம் வந்தாடும் வீணை 
நல்லக் காதல் கொண்டாடும் பெண்மை

ஒரு ராகம் வந்தாடும் வீணை 
நல்லக் காதல் கொண்டாடும் பெண்மை 

Share:

No comments:

Post a Comment

© TamilSongLyrics All rights reserved | Theme Designed by Seo Blogger Templates