ஆஅ ....
அதிகாலை காற்றே நில்லு
இதமான பாடல் சொல்லு
இனிமை பிறந்ததே மனதும் பறந்ததே
இது ஒரு புது சுகமே
அதிகாலை காற்றே நில்லு
இதமான பாடல் சொல்லு
இளமையின் அலைகளில் பருவமும் மிதந்தது
இமைகளின் அசைவினில் உலகமும் பணிந்தது
ஓ .. காலை மேகம் சோலை ஆகும்
வானம் எங்கள் சாலை ஆகும்
தாமரை கொடை விறிக்கும்
அதிகாலை காற்றே நில்லு
இதமான பாடல் சொல்லு
மலரினம் சிரித்திட திசைகளும் எழுந்தது
பொழுதுகள் விடிந்திட தவங்களும் புரிந்தது
ஓ .. வானவில்லின் வண்ணம் யாவும்
பாதம் வந்தே கோலம் போடும்
காவியம் தலை வணங்கும்
அதிகாலை காற்றே நில்லு
இதமான பாடல் சொல்லு
இனிமை பிறந்ததே மனதும் பறந்ததே
இது ஒரு புது சுகமே
No comments:
Post a Comment