Saturday, 12 April 2014

அடி ராங்கி ராங்கி ராங்கி_____________Saatai





அடி ராங்கி ராங்கி ராங்கி
நீ போற என் உசுர வாங்கி
அடி ராங்கி என் ராங்கி ராங்கி
நீ போற என் உசுர வாங்கி
ஒறங்காம கிடக்கேனே நீ என்னதுக்கு 
கண்ணுக்குள்ள நொழஞ்ச
தவறேதும் புரியாம நீ என்னதுக்கு 
நெஞ்ச வந்து அறைஞ்ச
அய்யோ பாடா படுத்துறியே பாயா சுருட்டுறியே

என்னானதோ ஏதானதோ ஒண்ணும் புரியாமலே
அல்லாடுறேன் உன்னாலே நான் சொல்ல தெரியாமலே
அன்னம் தண்ணி தேவையில்ல உன்ன பத்தி பேசுனா
அட்ட கத்தி கூட வெட்டும் உன்ன சொல்லி வீசுனா
அழகாலே நிதம் நீயே என்ன கட்டி வச்சு அடிக்கிறியே
என்ன ஓடா ஒடைக்கிறியே காடா கொளுத்துறியே

அடி ராங்கி என் ராங்கி ராங்கி
நீ போற என் உசுர வாங்கி
          
காப்பி தண்ணி போல என்ன கண்ணு ரெண்டும் ஆத்துதே
மூடி வச்ச ஆசை எல்லாம் பொத்துகிட்டு ஊத்துதே
மொத்ததுல என்ன நீயே பித்துக்குளி ஆக்குற
வெட்டிப் பய என்ன கூட புத்தகமா மாத்துற
உறி போல குறி பாத்து
என்ன சில்லு சில்லா ஒடைக்கிறியே
என்ன நாரா கிழிக்கிறியே நல்லா கொழப்புறியே

அடி ராங்கி ...

Share:

No comments:

Post a Comment

© TamilSongLyrics All rights reserved | Theme Designed by Seo Blogger Templates