Saturday, 12 April 2014

ஸஹாயனே ஸஹாயனே________Saatai





ஸஹாயனே ஸஹாயனே நெஞ்சுக்குள் நீ முழைத்தாய்
ஸஹாயனே ஸஹாயனே என்னை நீ ஏன்  பறித்தாய்
உன் எண்ணங்கள் தாக்கி என் கன்னங்கள் பூத்து
நீ வயதுக்கு வாசம் தந்தாய்

ஸஹாயனே ஸஹாயனே நெஞ்சுக்குள் நீ முழைத்தாய்..

ஒரு முறை உன் பேரை உதடுகள் சொன்னாலே
பசியின்றி போவதென்ன
பலமுறை சொன்னாலும் உறங்கிட எண்ணாமல்
விழி ரெண்டும் கேட்பதென்ன
தவறி விழுந்த பொருள்போல்
எனை எடுத்தாயடா
தவணை முறையில் உனை நான்
சிறை பிடித்தேனடா
பிள்ளை போலே என்னைக் கையில் ஏந்து
எல்லை ஏதும் இல்லை அன்பில் நீந்து நீந்து

ஸஹாயனே ஸஹாயனே நெஞ்சுக்குள் நீ முழைத்தாய்
ஸஹாயனே ஸஹாயனே 

கனவிலும் காணாத வகையினில் உன் தோற்றம்
எனக்குள்ளே கூச்சல்போட
இதுவரை கேட்காத இசை என உன் பேச்சு
அளவில்லா ஆட்டம் போட
இறந்து  இறந்து பிறக்கும் நிலை இது தானடா
மகிழ்ந்து மகிழ்ந்து மரிக்கும் வரம் கொடுத்தாயடா
கள்ளப்பார்வை என்னைக் கொத்தி தின்ன
என்ன ஏது என்று உள்ளம் எண்ண எண்ண

ஸஹாயனே ஸஹாயனே நெஞ்சுக்குள் நீ முழைத்தாய்
ஸஹாயனே ஸஹாயனே என்னை நீ ஏன்  பறித்தாய்
உன் எண்ணங்கள் தாக்கி என் கன்னங்கள் பூத்து
நீ வயதுக்கு வாசம் தந்தாய்


Share:

No comments:

Post a Comment

© TamilSongLyrics All rights reserved | Theme Designed by Seo Blogger Templates