Saturday, 12 April 2014

அய்யய்யோ நெஞ்சு அலையுதடி_________Aadukalam





அய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
என் மேல நிலா பொழியுதடி
உன்ன பாத்த அந்த நிமிஷம்
உறஞ்சு போச்சே நகரவே இல்ல
தின்ன சோறும் செரிக்கவே இல்ல
பொலம்புறேன் நானே
உன் வாசம் அடிக்குற காத்து
என் கூட நடக்கிறதே
என் சேவல் கூவுற சத்தம்
உன் பேரா கேட்கிறதே

அய்யய்யோ ...

உன்ன தான் அனல் காத்து
கடக்கையில பூங்காத்து
பொலம்பி தவிக்குதடி என் மனசு
ஓ..திருவிழா கடைகள போல
தெனருறேன் நான் தானே
எதிரில் நீ வரும் போது
மேளருறேன்  ஏன் தானோ
கண் சிமிட்டும் தீயே
என்ன எரிச்சு புட்ட நீயே

அய்யய்யோ ..

மழைச் சாரல் விழும் வேளை
மண் வாசம் மணம் வீச
உன் மூச்சு தொடவே நான் மிதந்தேன்
ஓ.. கொடியில அடிக்கிற மழையா
நீ என்ன நனச்சாயே
ஈரதுல அணைக்கிற சுகத்த
பார்வையில கொடுத்தாயே
பாதகத்து என்ன
ஒரு பார்வையால கொன்ன
ஊரோடு வாழுற போதும்
யாரோடும் சேரல நான்

Share:

No comments:

Post a Comment

© TamilSongLyrics All rights reserved | Theme Designed by Seo Blogger Templates