Thursday, 20 March 2014

உனக்குள்ளே மிருகம் தூங்கி _ Billa II




உனக்குள்ளே மிருகம் தூங்கி விட நினைக்கும்
எழுந்து அது நடந்தால் எரிமலைகள் வெடிக்கும்
கனவுகளை உணவை கேட்டு அது துடிக்கும்
உன்னை அது விழுங்கி உந்தன் கையில் கொடுக்கும்
எரிக்காமல் தேன் ஆடை கிடைக்காது
உதைக்காமல் பந்து அது எழும்பாது
வழி அது தான் உயிர் பிழைக்கும்
இது வரையில் இயற்கையின் விதி இது தான் (2)

நரகம் அதில் நீயும் வாழ்ந்தால்
மிருகம் என மாற வேண்டும்
பலி கொடுத்து பயமுறுத்து
வெட்ட வெட்ட தலை நிமிர்த்து
உலகமது உருண்டை இல்லை
நிழல் உலகில் வடிவம் இல்லை
இலக்கணத்தை நீ உடைத்து
தட்டி தட்டி அதை நிமிர்த்து
இந்து நன்பம் யாரும் இல்லையே
எதிர்க்கும் பகைவன் யாரும் இல்லையே
இனி நீ தான் உனக்கு நண்பனே
என்றும் நீ தான் உனக்கு பகைவனே
வழி அது தான் உயிர் பிழைக்கும்
இது வரையில் இயற்கையின் விதி இது தான்

முதல் அடியில் நடுங்க வேண்டும்
மறு அடியில் அடங்க வேண்டும்
மீண்டு வந்தால் மீண்டும் அடி
மறுபடி மரண அடி
அடிக்கடி நீ இறக்க வேண்டும்
மறுபடியும் பிறக்க வேண்டும்
உறக்கத்திலும் விழித்திரு நீ
இரு விழி திறந்த படி
இனி நீ தான் உனக்கு தொல்லையே
என்றும் நீ தான் உனக்கு எல்லையே
நீ தொட்டால் கிழிக்கும் முள்ளையே
வழிகள் இருந்தும் வலிக்கவில்லையே
வழி அது தான் உயிர் பிழைக்கும்
இது வரையில் இயற்கையின் விதி இது தான்
Share:

No comments:

Post a Comment

© TamilSongLyrics All rights reserved | Theme Designed by Seo Blogger Templates