Thursday, 20 March 2014

ஏலே ஏலே மருது_____Panidiyanadu



ஏலே ஏலே மருது இவ எந்த ஊரு கருது
பாரு பாரு தங்கத் தேரு தேரு
மேலமாசி வீதி வருது

ஏலே ஏலே மருது இவ எந்த ஊரு கருது
பாரு பாரு தங்க தேரு தேரு
மேலமாசி வீதி வருது
சுத்தமுள்ள உத்தமி குணத்துக்கு
இந்த மனம் விழுந்தாச்சு
அவ முத்துப்பல்லு தெரியும் சிரிப்புக்கு
மொத்த உசுர் பறிப்போச்சு

ஏலே ஏலே மருது இவ எந்த ஊரு கருது
பாரு பாரு தங்கத் தேரு தேரு
மேலமாசி வீதி வருது

வயசு கன்னியோ மனசு கடவுளோ
புடவ கட்டிப் போகும் பொல்லாத குழந்தையோ
சிறுத்த இட போல என் உசுரு வாடுது
பெருத்த பணம் போல பிரியமுமோ கூடுது
ஒரு மெல்லிய மேகமா போகுறா
அந்த மீனாட்சி கிளி இவளோ
ஒரு மின்னலின் பிள்ளையா பாக்குறா
நாளை என் தாயின் மருமகளோ

ஏலே ஏலே மருது இவ எந்த ஊரு கருது
பாரு பாரு தங்க தேரு தேரு
மேலமாசி வீதி வருது

தரும தேவதை கருணைப் பார்கையில்
சபலம் பறக்குது சரீரம் மறக்குது
ஆண்டு பதினெட்டில் அனைவருக்கும் தாயடி
அன்னை தெரசாவின் பேத்தியும் நீயடி
எந்த பெண்ணோடும் எழுவது காமமே
அடி உன்னோடு தோணலையே
சிறு முந்தாணை மூடிடும் தெய்வமே
உன்ன முத்தாட தோணலையே

ஏலே ஏலே மருது ஹே ஹே
இவ எந்த ஊரு கருது ஹே ஹே ஹே
பாரு பாரு தங்க தேரு தேரு
மேலமாசி வீதி வருது
சுத்தமுள்ள உத்தமி குணத்துக்கு
இந்த மனம் விழுந்தாச்சு
அவ முத்துப்பல்லு தெரியும் சிரிப்புக்கு
மொத்த உசுர் பறிபோச்சு

யாரோ யாரோ ஒருத்தி
முன்ன போறா என்னக் கடத்தி
ஆளக் கொல்லும் அந்த கொள்ளிக் கண்ணில்
உசுரோட என்னக் கொழுத்தி
Share:

No comments:

Post a Comment

© TamilSongLyrics All rights reserved | Theme Designed by Seo Blogger Templates