Friday, 21 March 2014

எவனோ ஒருவன் வாசிக்கிறான்_Alaipayuthe



எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

தவம்போல் இருந்து யோசிக்கிறேன்

அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்



எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்



எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்



தவம்போல் இருந்து யோசிக்கிறேன்

அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்



கேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன்

கேட்பதை அவனோ அறியவில்லை

காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே

அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை



எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்



புல்லாங்குழலே! பூங்குழலே!

நீயும் நானும் ஒரு ஜாதி



புல்லாங்குழலே! பூங்குழலே!

நீயும் நானும் ஒரு ஜாதி



என் உள்ளே உறங்கும் ஏக்கத்திலே

உனக்கும் எனக்கும் சரிபாதி



கண்களை வருடும் தேனிசையில்

என் காலம் கவலை மறந்திருப்பேன்

இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான்

என்றோ என்றோ இறந்திருப்பேன்!



எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்



உறக்கம் இல்லா முன்னிரவில்

என் உள்மனதில் ஒரு மாறுதலா



உறக்கம் இல்லா முன்னிரவில்

என் உள்மனதில் ஒரு மாறுதலா



இரக்கம் இல்லா இரவுகளில்

இது எவனோ அனுப்பும் ஆறுதலா



எந்தன் சோகம் தீர்வதற்கு

இதுபோல் மருந்து பிறிதில்லையே



அந்தக் குழலை போல் அழுவதற்கு

அத்தனை கண்கள் எனக்கில்லையே



எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்



எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
Share:

No comments:

Post a Comment

© TamilSongLyrics All rights reserved | Theme Designed by Seo Blogger Templates