எவன் என்று நினைத்தாய்...
எதை கண்டு சிரித்தாய்...
விதை ஒன்று முளைக்கையில்
வெளிப்படும் முழுரூபம் பம்
பம்
நெருப்புக்கு பிறந்தான்
நித்தம் நித்தம் வளர்ந்தான்
வேளை வந்து சேரும்போது
வெளிப்படும் சுயரூபம் பம்
பம்
யார் என்று புரிகிறதா
இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை வென்றே
சரித்திரம் படைத்தவன்
நியாபகம் வருகிறதா
யாருக்கும் அடிமை இல்லை
இவன் யாருக்கும் அரசன் இல்லை
காடுகள் தாண்டி கடக்கின்ற பொழுது
காட்டுக்கும் காயம் இல்லை
எவன் என்று நினைத்தாய்
எதைக் கண்டு சிரித்தாய்
விதை ஒன்று முளைக்கையில்
வெளிப்படும் புதுரூபம் பம்
பம்
நெருப்புக்கு ...
அல்லாஹ் ஹூறக் அல்லாஹ் மேரக்
அடிமைகள் ஆ னோ மே ..
அல்லாஹ் ஹூறக் அல்லாஹ் மேரக்
அடிமைகள் ஆ னோம் ..
சின்ன சின்ன அணுவாய்
மண்ணுக்குள்ளே கிடப்பான்
வெட்டுபடும் வேளையிலே
வெளிப்படும் விஸ்வருபம் பம்
பம்
என்ன ரூபம் எடுப்பான்
எவருக்கு தெரியும்
சொன்ன ரூபம் மாற்றி மாற்றி
எடுப்பான் விஸ்வருபம் பம்
பம்
யார் என்று புரிகிறதா
இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை வென்றே
சரித்திரம் படைத்தவன்
நியாபகம் வருகிறதா
யாருக்கும் ..
ரூபம் ரூபம் ரூபம் ரூபம்...
ரூபம் ரூபம் விஸ்வருபம்
No comments:
Post a Comment