Thursday, 20 March 2014

என் உயிரின் உயிராக என் விழியின் மொழியாக _ Bramman



என் உயிரின் உயிராக என் விழியின் மொழியாக
என் மனதின் இசையாக வருவாயா வருவாயா
என் இரவின் கனவாக என் கடலின் கரையாக
என் வழியின் துணையாக வருவாயா வருவாயா

மழை பெய்தால் ஓ வெயில் காய்ந்தால் என்ன 
கடல் நீளம் மட்டும் என்றும் சாயம் போகாதே
உன்னை எண்ணும் நேரம் ஓ இதயத்தின் ஓரம் ஓ
அடி ஈரம் இல்லா சாரல் ஒன்று வீசுதே 

என் உயிரின் உயிராக ....

பஞ்சுலே தாவும் தீயும் நெஞ்சிலே வாழும் அன்பும் 
ஓயுமா அடி ஓயுமா
அது மேலும் மேலும் கூடும் அன்பே
காதலை கண்ணில் கண்ட கடவுளை நேரில் பார்த்தால்
போற்றவா இல்லை தூற்றவா நான் குழம்பிப் போகிறேனே
மயில் தொகை சுமந்தும் ஓடும் மரவண்டி போலே தான்
மனதோடு உன்னை ஏற்றி மேடு பள்ளம் பாராமல் சென்றேன்

என் உயிரின் உயிராக ....

பாலையின் நடுவே கிணறாய் நதிகளின் நடுவே படகாய்
ஞாபகம் உன் ஞாபகம் என்னை தாங்கிக் கொண்டு போகும் 
உன்னுடன் இல்லா தருணம் சுவாசிக்கும் நொடியும் மரணம் 
ஆயுளின் நீலமே உன் அணைப்பின் நீளமே
பனி பெய்யும் நீராலே மலை என்றும் கரையாது
தொலை தூரம் போனாலும் உன்னைத் தேடி ஓடோடி வருவேன் 

என் உயிரின் உயிராக ....

Share:

No comments:

Post a Comment

© TamilSongLyrics All rights reserved | Theme Designed by Seo Blogger Templates